states

img

பாஜக ஆளும் மத்தியபிரதேசத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி கும்பல் பலாத்காரம்... 6 பேரை பேர் கைது....

போபால் 
மத்திய பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டத்தில் காதுகேளாத, வாய்பேச முடியாத 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் நபர் தான் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு மேலும் 5 பேருடன் இணைந்து இந்த பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது. நடந்ததை சிறுமி வீட்டில் கூறவில்லை. 
பலாத்கார புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதனை அப்பகுதி இளைஞர் ஒருவர் சிறுமியின் குடும்பத்தினரிடம் காண்பித்த பின்பு தான் தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது என அவரது தந்தைக்கு தெரிய வந்துள்ளது.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி 6 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்ட்டவர்களில் 4 பேர் சிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது.  

;